Vikatan rasi palan

  1. சனி பெயர்ச்சி பலன் 2023: எதிரிகளை ஓட ஓட விரட்டும் சனி பகவான்..கடன் பிரச்சினை யாருக்கு தீரும்
  2. Rasi Palan (ராசி பலன்)


Download: Vikatan rasi palan
Size: 70.2 MB

சனி பெயர்ச்சி பலன் 2023: எதிரிகளை ஓட ஓட விரட்டும் சனி பகவான்..கடன் பிரச்சினை யாருக்கு தீரும்

சென்னை: சனிபெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் சிலருக்கு கடன் பிரச்சினையை தீர்க்கப்போகிறார் சனிபகவான். எதிரிகள் பிரச்சினை நீங்கும் நோய்கள், வம்பு வழக்குகள் முடிவுக்கு வரப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை சனிபகவான் தரப்போகிறார் என்று பார்க்கலாம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் ஆறாம் இடத்தில் பயணம் செய்வது சிறப்பு. நிறைய ஆதாயங்கள் கிடைக்கப்போகிறது. கும்ப சனி குதூகலத்தை தரப்போகிறார். ருண ரோக சத்ரு சனியால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. சனிபகவான் உங்களது ராசிக்கு 5 மற்றும் 6ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. விபரீத ராஜயோகம் தேடி வரும். சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு வருவதால் கடன்களைப் பற்றி அதிகம் பேசவோ கவலைப்படவோ வேண்டாம். கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் 2023ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது. இதுநாள் வரை மறைந்திருந்த நோய்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். வெற்றியை தரும் சனிப்பெயர்ச்சி இது நாள் வரைக்கும் ஏற்பட்ட சோதனைக...

Rasi Palan (ராசி பலன்)

வேதம் அருளிய பல பெரும் கொடைகளில் தனிப் பெரும் கொடையாக இருப்பது வேத ஜோதிடம் ஆகும். ஜோதிடம் என்றால் ஒளியியல் என்று பொருள். நட்சத்திரங்களையும் அதன் கூட்;டங்களையும் வைத்து உருவாக்கப்பட்டது தான் ஜோதிடம். ஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே தோன்றியதாகும். தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை. சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. கண்களைக் கொண்டு தானே சித்திரம் வரைய முடியும். நமது வாழ்க்கைச் சித்திரத்தை நாம் சிறப்பாக வரைவதற்கு ஜோதிடத் தின் மூலம் கூறும் பலன்கள் நமக்கு உதவுகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தான் ஆவல் இருக்காது? அதற்கு தேவையான உபாயங்களுள் ஒன்று தான் ஜோதிடத்தின் மூலம் கணித்துப் பலன் கூறப்படும் ராசி பலன். இன்றைய ராசி பலன் (Today Rasi Palan) இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். எந்த முன்னேற்பாடும் இன்றி ஒரு நாளை துவக்குவது தான் பெரும்பாலான பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதனால் பணப் பிரச்சினைகளும் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கிரகங்களின் நிலை காரணமாக மாறுபடும் நமது நாளின் சுப, அசுப பலன்களை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலம் நமது அன்றைய தினத்தை பிரச்சினை இல்லாமலும், இனிமையாகவும் கழிக்க பொதுவான இன்றைய ராசி பலனைப் பாருங்கள். உங்கள் நாள் மகிழ்ச்சியாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்!